Thursday, September 15, 2011

அட‌ர்த்தி

உற‌ங்கும் ம‌லை,
ந‌ட‌மாட்ட‌மில்லாது
ஓய்ந்த‌ சாலை,
பின்னிர‌வில் எரியும்
தெருவிள‌க்கு,
மூடிய‌ கோவில் க‌த‌வு,
க‌விழ்ந்து தூங்கும்
குழ‌ந்தை


இவைகளை விட‌
அட‌ர்த்தியாக‌


த‌‌‌ண்ட‌வாள‌ங்க‌ளாக‌
ப‌டுத்திருக்கும்,

ந‌ம்மிருவ‌ர் ந‌டுவே
மௌன‌மும்


ப‌க்க‌வாட்டில் வ‌ழியும்
உன் க‌ண்ணீரும்.

0 comments:

Post a Comment